நிழலின் அருமை
வெயிலில் தெரியும்,
நீரின் அருமை
தாகத்தில் தெரியும்..
உணவின் அருமை
பசியில் தெரியும்,
படையின் அருமை
போரில் தெரியும்..
உழைப்பின் அருமை
உயர்வில் தெரியும்,
ஊக்கத்தின் அருமை
ஆக்கத்தில் தெரியும்..
பணத்தின் அருமை
ஏழைக்குத் தெரியும்,
வேலையின் அருமை
இல்லாதவனுக்குத் தெரியும்..
மருந்தின் அருமை
நோயில் தெரியும்,
விருந்தின் அருமை
விழாவில் தெரியும்..
நண்பனின் அருமை
பண்பினில் தெரியும்,
உழவனின் அருமை
விளைச்சலில் தெரியும்..
கூடலின் அருமை
ஊடலில் தெரியும்,
தேடலின் அருமை
தெளிந்தப் பின் தெரியும்..
தாயின் அருமை
என்றும் தெரியும்,
தகப்பனின் அருமை
வளர்ந்தப் பின் தெரியும்..
பெண்ணின் அருமை
வீட்டில் தெரியும்,
ஆணின் அருமை
வெளியில் தெரியும்..
கணவனின் அருமை
கட்டிலில் தெரியும்,
மனைவியின் அருமை
தொட்டிலில் தெரியும்..
பாலாவின் அருமை
படைப்பினில் தெரியும்..
இனிய மாலை வணக்கம்,
அன்பன், ஆர்.வீ. பாலா..
02.12.16..
No comments:
Post a Comment