இறை வழிபாடு
கோவிலில் சாமி கும்பிடும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
தயவு செய்து யாரும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சுவாமி கும்பிடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் பலரும் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்துக் கிடப்பதை மனதில் கொள்ளவும். தாங்கள் கரங்களை உயர்த்தி வழிபட்டால், பின்னே இருப்பவர்களுக்கு தங்கள் கர தரிசனம் மட்டுமே கிட்டும், இறைவனை சரிவர அவர்களால் தரிசிக்க இயலாது. தங்களை மனசுக்குள் அவர்கள் சபிப்பர், கோவிலுக்கு சென்று பாபம் தொலைக்காமல் சாபம் ஏன் வாங்க வேண்டும், சற்றே சிந்திப்பீராக.
தமது வீட்டில் இறை வழிபாடு செய்யும் போது தங்கள் இஷ்டம் போல கும்பிடுங்கள். கோவிலுக்கு வரும் போது, பிறர்க்கு உபத்திரவம் செய்யாமல், அமைதியாக வழிபட வேண்டும்.
நெஞ்சுக்கு நேராக கைகளை குவித்து, தலையை தாழ்த்தி சுவாமி கும்பிடுவதை இனி பழக்கப் படுத்திக் கொள்வோம்.
நேற்று தில்லை நடராஜர் கோயிலில் தீப ஆராதனை நடக்கும் பொழுது, பலரது கைகள் தலைக்கு மேலே உயர்ந்ததால், பின்னே நின்றவர்கள் அதீத சிரமத்திற்கு உள்ளானதைக் கண்டு மனம் நொந்து போனேன். அருகில் நின்றவர்களிடம் கையை இறக்குமாறு கூறியும், அவர்கள் சினத்துடன் என்னை முறைக்கையில் அவர்கள் மீது கோபப்படுவதா இல்லை அவர்களது அறியாமையைக் கண்டு அனுதாபப்பபடுவதா எனக்கு விளங்கவில்லை.
ஒரு சிறு முயற்சியாக, இப்பதிவினை இட்டுள்ளேன். இதைப் படித்த பிறகு, இனியாவது கோவிலுக்கு செல்பவர்கள் தயவு செய்து பிறர்க்கு தொந்தரவு தராமல் சுவாமி கும்பிடுமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.10.18