கொரோனா
இன்னும் எத்தனை
நாட்கள் இவ்வாறு
இருப்பது..
நான்கு சுவற்றுக்குள்
அடைந்து சிறைப்பட்டுக்
கிடப்பது..
அலுவலகத்திலுள்ள
காலியான இருக்கை
சிரிக்கிறது..
எப்போது அமர்வேன்
எனும் ஏக்கத்துடனே
பார்க்கிறது..
எடுக்கப்படாத காரின்
முன்பக்கத்து இருக்கை
வா வென்கிறது..
சாலையோரத்தின்
இருமருங்கிலும்
பூக்களின் மலர்ச்சி..
நடமாட்டமில்லாத
வழித்தடம் யாவும்
பறவைகள் ஆட்சி..
இயற்கை தன் போக்கில்
இயல்பாகவே சிறப்புற
இயங்குகிறது..
மனிதனின் வாழ்வியலோ
முறையற்றுப் போனதால்
முடங்கியது..
திருத்த முயலுவதை விட
திருந்த முயலுவதே இனி
சரியா யிருக்கும்..
இசைவோம் ! இணைவோம் !
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
22.05.2020