விறுவிறுவென
வாரமும் கழிந்து
வியாழக்கிழமை
வந்துள்ளது.
ஒரு பகலும் இரவும்
நகர்ந்து போனால்
வெள்ளிக்கிழமை
பிறந்து விடும்.
சனியும் ஞாயிறும்
சடுதியில் முடிந்து
கட்டுப்பில் நம்மை
கொன்று விடும்.
திரும்பவும் இந்த
திங்கட்கிழமை
நெடிதாய் வாரத்தை
துவக்கி விடும்.
ஐந்து சனிக் கிழமை
மாதத்தில் வருகையில்
அலாதியாய் மனதில்
குஷி பிறக்கும்.
அப்பாடா என்று
விடுப்பினில் கிடக்க
பள்ளிச் சிறார் போல்
மனம் துடிக்கும்.
😂😂😃😃😅😅😆😆
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.06.2019