புகையிலை ஒழிப்பு தினம்
புகையை உள்ளிழுத்து
நுரையீரலுக்குள் நிரப்பி
மூக்காலும் வாயாலும்
வெளித் தள்ளுவர்.
கண்ணிமை மூடி கச்சிதமாய்
இரு விரல் இடுக்கில் செருகி
வாய்க்குள் வைத்தெடுத்து
புகை விடுவர்.
தானும் சீரழிந்து தனது
பக்கத்திலும் புகை விட்டு
சுற்று வட்டாரத்தை இவர்
நாசம் செய்வர்.
நெருப்புத் துண்டு இழுப்போர்
தனக்கே கொள்ளி வைப்பதை
எந்நாள் உணர்வரோ அந் நாள்
அவரது நன்னாளாகும்.
புகையிலையின் பிள்ளைகள்
பெயர் உருவம் பலவும் பெற்று
பாக்கெட்டில் அடைபட்டு இவர்
பாக்கெட்டில் அமர்ந்திருக்கும்.
மிக அதிக வரியும் விதிக்கனும்
மோசமான நிலை உணர்த்தனும்
பொது இடங்களில் புகைப்போரை
கண்டதும் கைது செய்யனும்.
புகையிலையில்லா புவி வேண்டும்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.05.2019