தொந்தி மைந்தன்
ஒரு புறம் இருக்க
பிந்தி பிறந்தவன்
மறு புறம் நிற்க
துந்துபி நாதம்
எங்கும் முழங்க
நந்தி தேவரும்
மத்தளம் தட்ட
நாரத முனிவர்
தந்தியை மீட்ட
நான்முக கடவுள்
மறைகளை ஓத
இந்திரனுடன் கூடி
அமரர்கள் துதிக்க
இமயவன் மகளும்
அருகினில் இருக்க
அந்தி சாயும் வேளை
ஆனந்த நடனம் அதை
தரிசித்து திளைக்க
தில்லைக்கு போகனும்.
சித்ஸபேஸா
சிவசிதம்பரம்
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
08.09.2022