Search This Blog

Saturday, January 27, 2018

ஆர்.கே.நகர்




சென்னையைப் கைப்பிடித்த
மண்ணை மைந்தன், செல்வி
ஜெயலலிதாவைப் போற்றும்
மண்ணின் மைந்தன்..

உடலால் மறைந்தாலும்
உயிர் பிரிந்து சென்றாலும்
உள்ளத்தில் குடி கொண்ட
உயர்வான தலைவி அவள்..

எம்.ஜி.ஆர் என்ற மந்திரம் போல
அம்மா என்கிற மூன்றெழுத்தும்
ஆர்.கே நகர் வாசிகளிடையே
வாக்கு வங்கியை அள்ளியது..

காசை அள்ளித் தெளித்தாலும்
கால் கடுக்க சுற்றித் திரிந்தாலும்
கட்சிக்காக ஓட்டு போடாமல்
கரிசனப்பட்டே ஓட்டு இட்டனர்..

ஓரணியில் ஒன்று திரண்ட
ஒட்டு மொத்த தலைமையும்
ஓட்டு வங்கி சேர்க்காமல்
உருக்குலைந்து போனது..

சுட்டெரிக்க சூரியன் முயன்றும்
அதிமுக இரண்டாய் பிரிந்தும்
அம்மா என்ற பெயர் ராசிக்கே
இறுதியில் வெற்றி உரித்தானது..

தள்ளாத தலைவரும் கூடவே
தணியாத செயல் தலைவரும்
தமிழகத்து தலையெழுத்தை
மாற்ற எண்ணி ஓய்ந்தனர்..

தமிழா,

உன்னை ஆள புதிதாக
ஒரு மூன்றெழுத்து இன்று
உருவாகியுள்ளது, ஆம்
டி. டி. வி எனும் புது எழுத்தே..

அப்பல்லோ மர்மம் இனி
அடங்கிப் போய் விடும்
ஆதாரங்கள் எல்லாம் கூட
அஸ்தமனமாகி விடும்..

சட்ட மன்றத்தில் இனி
வேடிக்கை நடக்கும்
சகட்டு மேனிக்கு கட்சி
தாவல்களும் இருக்கும்..

கோட்டையை பிடிக்க
குக்கரில் வெந்ததை
இலையை வி(பி)ரித்து
பங்குண்டு திளைப்பர்..

ஊழல் வழக்கில் சிலர்
விடுதலை பெறுவர்
ஊழல்வாதி என்போர்
வாக்குகள் பெறுவர்..

தமிழக செய்திகள் தினம்
தலையங்கத்தில் வருகுது
தீபாவளி தள்ளுபடி போல்
அதிரடி அறிவிப்பும் நடக்குது..

கொண்டாட வேண்டியதா
திண்டாட வேண்டியதா என
சற்று பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்..

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.12.2017









No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...