Search This Blog

Saturday, January 27, 2018

இல்லத்தரசி




களைத்து வருகையில்
புன்சிரிப்பேந்தி சூடாய்
காபியும் தந்திடுவாள்..

சந்தோஷமாக நித்தம்
சமையலும் செய்து
பசியினைப் போக்கிடுவாள்..

மாதக் கடைசியில் தனது
சேமிப்பு பணத்தையும் பகிர்ந்து
குடும்பத்தை நடத்திடுவாள்..

அவளும் சராசரி மனுஷியாவாள்
அலுவலகத்தின் ஆத்திரங்களை
அம்மணியிடம் காட்ட வேண்டாம்..

பிறந்த வீட்டின் சுகத்தை விடுத்து
புகுந்த வீட்டிற்கு சேவகம் செய்யும்
சம்பளம் வாங்காத வேலைக்காரி..

ஆணிற்கு நிகர் பெண்ணென்று
ஆயிரம் முறையில் கூறிடினும்
அடுப்பங்கரையே அவளுக்கு கதி..

துவைத்த துணியை காயப்போடவும்
சமைக்கும் போது காய்கறி நறுக்கியும்
சின்ன சின்னதாய் கூட உதவிடுங்கள்..

உப்பு காரம் சுவையினில் சரிந்தால்
கூச்சலிட்டு அவளிடம் சண்டையிடாமல்
அன்பாய் எடுத்துக்கூறி அனுசரியுங்கள்..

பெண்ணில்லாமல் ஆணில்லை என
வளரும் பருவம் தாயுடனும் பிறகு
மிச்சப் பருவம் தாரத்துடனும் உண்டு..

இட ஒதுக்கீடு எவ்வளவு இருந்தும்
இஷ்டமாய் வேலையை இழுத்து செய்யும்
இவளுக்கு இல்லமே என்றும் ஒதுக்கீடு..

பெண்மையைப் போற்றுவோம் 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.10.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...