Search This Blog

Sunday, February 4, 2018

பயணம்

பயணம்

விந்தணுவில்
முட்டி மோதி
முதன் முதலாய்
தனிப் பயணம்..

கருவறையின்
நீர் அறையில்
பாதுகாப்பாய்
பத்துமாதப் பயணம்..

பொக்கை வாயுடன்
கொஞ்சும் குழந்தையாய்
நான்கு கால்களில்
தவழும் பயணம்..

வாலிப வயதினில்
வெகு வேகமாக
வளைய வந்திடும்
உற்சாகப் பயணம்..

வயோதிகம் எட்டிய
வாழ்வின் இறுதியில்
உடல் நிலை தளர்ந்த
ஊன்றுகோல் பயணம்..

பாசக்கயிறு வந்து
பரலோகம் செல்கையில்
நான்கு பேர் துணையுடன்
பாடையில் பயணம்..

படைத்தவன் தாளினைப் பற்றி
பயணப்படும் வாழ்க்கையாவும்
ஆனந்தமாய்க் கழிந்து போகும்
அச்சம் கொளல் வேண்டாம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.10.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...