பயணம்
விந்தணுவில்
முட்டி மோதி
முதன் முதலாய்
தனிப் பயணம்..
கருவறையின்
நீர் அறையில்
பாதுகாப்பாய்
பத்துமாதப் பயணம்..
பொக்கை வாயுடன்
கொஞ்சும் குழந்தையாய்
நான்கு கால்களில்
தவழும் பயணம்..
வாலிப வயதினில்
வெகு வேகமாக
வளைய வந்திடும்
உற்சாகப் பயணம்..
வயோதிகம் எட்டிய
வாழ்வின் இறுதியில்
உடல் நிலை தளர்ந்த
ஊன்றுகோல் பயணம்..
பாசக்கயிறு வந்து
பரலோகம் செல்கையில்
நான்கு பேர் துணையுடன்
பாடையில் பயணம்..
படைத்தவன் தாளினைப் பற்றி
பயணப்படும் வாழ்க்கையாவும்
ஆனந்தமாய்க் கழிந்து போகும்
அச்சம் கொளல் வேண்டாம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.10.17
No comments:
Post a Comment