நிம்மதி எங்கே
சீக்கிரம் வயசாகக் கூடாதா
சிவனேன்னு உட்கார மாட்டோமா
சிந்தையிலே நிதம் நிதம் இதே
சிந்தனையே..
அலுவலகத்தின் பணிச்சுமைகள்
அதனுடன் கூட திருப்தியடையாத
மேலதிகாரியின் எதிர்பார்ப்புகள்
ஏகத்துக்கும் மன உளைச்சல்கள்..
தொலைபேசி இருப்பதால் நமது
தனிமை தொலைந்து போனது
இருபத்தி நாலு மணி நேரம் கூட
இன்னும் சுருங்கிப் போனது..
அவசர கதியில் ஓட்டமெடுத்து மன
அழுத்தத்தையும் சுமந்திடும் வேளை
எப்படி ஐயா இங்கு மகிழ்ந்திருப்பது
எங்கே போய் நிம்மதியடைவது ?
மனக் குமுறலைப் பகிர்ந்து கொள்ள
நெருக்கமான ஓர் நண்பனும் இல்லை
சினிமா டிராமா என சுற்றும் பழக்கம்
சிறுவயது முதலே வாடிக்கையில்லை..
இத்தனையும் மீறி இல்லத்தினுள்ளே
இல்லத்தரசியின் இம்சையும் வேறு
சின்னத்திரையில் சீரியல் பார்த்து
சொப்பணம் காணும் ஆசைகள் வேறு..
பாரதத்தை விடுவிக்க அன்று
பா எழுதினான் பாரதி இன்று
பாரத்தை விடுவித்துக் கொள்ள
பா எழுதுகிறான் பாலா..
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.09.18
No comments:
Post a Comment