வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை
கண்மணியே
கள்ளம் இல்லாத
காதலும் புரிவேன்
உள்ளத்தை எனக்கு
தருவாயா.
வெள்ளம் ஒத்த
பாசமும் பொழிவேன்
இல்லறம் நடத்திட
வருவாயா.
கண்ணே மணியே
காதலியே என்று
கவிதையாய் எழுதி
கவர்ந்திடுவேன்.
கண்ணுக்குள்ளே
கருவிழி போலுனை
கலங்காது என்றும்
காத்திடுவேன்.
உலகிற்கு எல்லாம்
உதாரணமாக நாம்
ஒன்றாய் கூடியே
வாழ்ந்திடலாம்.
ஊரார் மெச்சிட
பிள்ளைகள் பெற்று
உற்சாகமாய் நாமும்
வாழ்ந்திடலாம்.
இந்த ஜோடிக்கு
ஈடு இல்லையென
காண்போர் யாவரும்
கூறிடுவர்.
இணை பிரியாது
இருப்பதைக் கண்டு
பொறாமையும் கூட
கொண்டிடுவர்.
இன்பத்தில் உய்ய
சந்தர்ப்பம் ஏற்று
என்னுடன் நீயும்
வருவாயா.
இந்திர லோகத்து
சுகத்திற்கு ஈடாய்
இல்லறம் பேணிட
வருவாயா.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.11.18
No comments:
Post a Comment