Search This Blog

Friday, November 30, 2018

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

கண்மணியே

கள்ளம் இல்லாத
காதலும் புரிவேன்
உள்ளத்தை எனக்கு
தருவாயா.

வெள்ளம் ஒத்த
பாசமும் பொழிவேன்
இல்லறம் நடத்திட
வருவாயா.

கண்ணே மணியே
காதலியே என்று
கவிதையாய் எழுதி
கவர்ந்திடுவேன்.

கண்ணுக்குள்ளே
கருவிழி போலுனை
கலங்காது என்றும்
காத்திடுவேன்.

உலகிற்கு எல்லாம்
உதாரணமாக நாம்
ஒன்றாய் கூடியே
வாழ்ந்திடலாம்.

ஊரார் மெச்சிட
பிள்ளைகள் பெற்று
உற்சாகமாய் நாமும்
வாழ்ந்திடலாம்.

இந்த ஜோடிக்கு
ஈடு இல்லையென
காண்போர் யாவரும்
கூறிடுவர்.

இணை பிரியாது
இருப்பதைக் கண்டு
பொறாமையும் கூட
கொண்டிடுவர்.

இன்பத்தில் உய்ய
சந்தர்ப்பம் ஏற்று
என்னுடன் நீயும்
வருவாயா.

இந்திர லோகத்து
சுகத்திற்கு ஈடாய்
இல்லறம் பேணிட
வருவாயா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...