ஸ்ரீராமஜெயம்
பதினான்கு ஆண்டுகள்
இராஜ்ஜியமும் துறந்தாய்
கானகத்தில் கரடு முரடில்
கவலையோடு அலைந்தாய்
குகனையும் சகோதரனாய்
நல் உறவாக வரித்தாய்
அகலிகைக்கு அபயமளித்து
உயிர் பெறவும் செய்தாய்
மனைவியைப் பறி கொடுத்து
மன நிம்மதியும் இழந்தாய்
சுக்ரீவனை காக்க வேண்டி
வாலி வதமும் புரிந்தாய்
ஆஞ்சனேய மூர்த்திக்கு
அருட் கரத்தை அளித்தாய்
இலங்கைக்கு செல்ல வேண்டி
சேது சமுத்திரம் சேர்ந்தாய்
வானரத்தின் துணை ஏற்று
பாலமொன்று அமைத்தாய்
விபீஷணனை அனுக்கிரகித்து
அடைக்களமாய் ஏற்றாய்
வான் வழியே அனுமனை
தூதனுப்பி வைத்தாய்
அடங்காத அசுரனை அன்று
அடக்கவும் நினைத்தாய்
இன்று போய் நாளை வர
வாய்ப்பையும் கொடுத்தாய்
இறுதியிலே போர் தனிலே
இராவணனை மாய்த்தாய்
முடி சூட்டி விபீஷணனை
மன்னனாக்கி மகிழ்ந்தாய்
மண்டோதரிக்கு மோட்ஷமும்
மனதாரத் தந்தாய்
விரைவாக அயோத்திக்கு
திரும்பவும் வந்தாய்
அக்கினிக்கு இரையாகும்
அனுஜனையும் காத்தாய்
நன்னாளும் வந்தது
நாடு நலம் பெற்றது
சீதா லட்சுமண பரத சத்ருக்ன
ஆஞ்சனேய சமேத ராமச்சந்திர
மூர்த்திக்கு வைபோகமாய்
பட்டாபிஷேகமும் நடந்தது
ஜெய் ஜெய் ராம் சீதா ராம் !!!
ஜெய் ஜெய் ராம் ஜானகி ராம் !!!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.2019
No comments:
Post a Comment