Search This Blog

Sunday, April 7, 2019

திங்களோ திங்கள்

திங்களோ திங்கள்

ஒவ்வொரு திங்களும்
வெவ்வேறு கடமையை
நிறைவேற்றி முடிக்கவே
முழுதாக  ஏழு நாட்களை
பரிசாகத் தருகின்றது.

என்ன செய்வது
என யோசித்து
முடிப்பதற்க்குள்
வாரம் ஒன்று கடந்து
போய் விடுகின்றது.

ஞாயிற்று கிழமை இரவில்
உறக்கம் வராத நிலையில்
மிச்சமாய் வைத்த பணிகள்
படுக்க விடாமல் சில நேரம்
படுத்தி எடுக்கின்றது.

சோம்பல் முறித்து
கை விரல் சொடுக்கி
கொட்டாவியும் விட்டு
சுறுசுறுப்பில்லாது
வேலைக்குச் செல்வதா ?

வெள்ளிக் கிழமை
மாலையைப் போல
உற்சாகம் கொள்ளனும்
சவால்களை எதிர்கொள்ள
தயாராக இருக்கனும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.04.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...