திங்களோ திங்கள்
ஒவ்வொரு திங்களும்
வெவ்வேறு கடமையை
நிறைவேற்றி முடிக்கவே
முழுதாக ஏழு நாட்களை
பரிசாகத் தருகின்றது.
என்ன செய்வது
என யோசித்து
முடிப்பதற்க்குள்
வாரம் ஒன்று கடந்து
போய் விடுகின்றது.
ஞாயிற்று கிழமை இரவில்
உறக்கம் வராத நிலையில்
மிச்சமாய் வைத்த பணிகள்
படுக்க விடாமல் சில நேரம்
படுத்தி எடுக்கின்றது.
சோம்பல் முறித்து
கை விரல் சொடுக்கி
கொட்டாவியும் விட்டு
சுறுசுறுப்பில்லாது
வேலைக்குச் செல்வதா ?
வெள்ளிக் கிழமை
மாலையைப் போல
உற்சாகம் கொள்ளனும்
சவால்களை எதிர்கொள்ள
தயாராக இருக்கனும்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.04.2019
No comments:
Post a Comment