Search This Blog

Wednesday, June 5, 2019

வியாழக் கிழமை

விறுவிறுவென
வாரமும் கழிந்து
வியாழக்கிழமை
வந்துள்ளது.

ஒரு பகலும் இரவும்
நகர்ந்து போனால்
வெள்ளிக்கிழமை
பிறந்து விடும்.

சனியும் ஞாயிறும்
சடுதியில் முடிந்து
கட்டுப்பில் நம்மை
கொன்று விடும்.

திரும்பவும் இந்த
திங்கட்கிழமை
நெடிதாய் வாரத்தை
துவக்கி விடும்.

ஐந்து சனிக் கிழமை
மாதத்தில் வருகையில்
அலாதியாய் மனதில்
குஷி பிறக்கும்.

அப்பாடா என்று
விடுப்பினில் கிடக்க
பள்ளிச் சிறார் போல்
மனம் துடிக்கும்.

😂😂😃😃😅😅😆😆

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.06.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...