ஜோதி
ஆதியில் வந்தது
அழிவிலும் இருப்பது
அரனார் கையினில்
அக்கினியாய் உள்ளது..
காலையில் கதிரவன்
கனலாய் உமிழ்வது
கனன்று எரியும்
அனலிலும் தெரிவது..
ஒவ்வொரு உயிரிலும்
ஒருங்கே இருப்பது
உள்ளத்தினுள்ளே
ஒளிந்து இருப்பது..
வடலூர் வள்ளலார்
ஏற்றி வைத்தது
தைப்பூச நந்நாளில்
தெய்வமாய் தெரிவது..
ஒன்றுமிலாதது
அனைத்துமானது
மகர ஜோதியாய்
மங்காமலும் இருப்பது..
கற்பூர ஆரத்தியில்
கடவுளை காண்பது
இருள் விலகியதும்
அருளைப் பொழிவது..
எங்கும் ஜோதி
எதிலும் ஜோதி
எவரும் ஜோதி
என்றுமே ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.01.18
No comments:
Post a Comment