இரைச்சல்
காதைக் கிழிக்கும்
பேரிரைச்சல், இது
கவனத்தை குலைக்கும்
பேரிரைச்சல்.
மண விழா நாட்களில்
ஊர்வலம் செல்கையில்
வாத்திய ஓசைகள்
விண்ணைப் பிளக்கும்.
பண்டிகை காலத்தில்
பட்டாசுகள் வெடித்து
பெரிசுகளின் காதை
பெயர்த்தெடுப்பர்.
கோவில் விழாக்களில்
ஒலிப்பெருக்கி கட்டி
பாட்டுச் சத்தத்தில்
பட்டையை கிளப்புவர்.
சாலையில் செல்கையில்
ஊர்திகள் யாவும்
சத்தத்தை எழுப்பி
சங்கடம் புரிவர்.
தேர்விற்கு படிக்கும்
மாணவ மணிகள்
இரைச்சல் கேட்டு
இம்சை அடைவர்.
சிகிச்சை பெற்றிடும்
நோயாளிகள் எல்லாம்
இரைச்சல் ஒலியால்
நொந்து போய் விடுவர்.
வயதினில் மூத்த
வயோதிகர் எல்லாம்
வேதனை அடைந்து
வருத்தம் கொள்வர்.
காது மடல் கிழியும்
சத்தமும் வேண்டாம்
கவனத்தை சிதைக்கும்
காரியமும் வேண்டாம்.
அச்சுறுத்துகின்ற
ஆரவாரம் வேண்டாம்
அமைதியாய் பொழுது
அமைந்திடல் வேண்டும்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.01.18
No comments:
Post a Comment