Search This Blog

Saturday, January 27, 2018

பத்மவிபூஷன்

பத்மவிபூஷன்

பண்ணை புரத்து
மனிதருக்கு பத்மவிபூஷன்
பாட்டினை மெட்டினில்
அழகித்தவர்க்கு பத்மவிபூஷன்
சிம்பொனி இசையால்
மகிழ்வித்தவருக்கு பத்மவிபூஷன்
பின்னணி இசையின்
அரசருக்கு பத்மவிபூஷன்
மெலடியால் மக்களை
மயக்கியவர்க்கு பத்மவிபூஷன்
கிராமத்து இசையை
கொடுத்தவருக்கு பத்மவிபூஷன்
கர்நாடக இசையையும்
குழைத்தவருக்கு பத்மவிபூஷன்
மொத்தத்தில் பாரத ரத்னாவிற்கு கிட்டியது பத்மவிபூஷன்..

இவ்வளவு பெருமையையும்
தலித் சாதி என்று சிறுமையிட்டு
இசையின் ராஜாதி ராஜனை
சிறு வட்டத்துள் சுருக்குவதை
சாமானிய ரசிகனாக என்னால்
சகித்துக் கொள்ள இயலவில்லை.

சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டு
சாதிக்கும் மனிதரை தாழ்த்த வேணாம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே
நிலை கெட்ட மனிதரை இங்கு நினைக்கையில் என்றென்றும்
நெஞ்சு பொறுக்குதில்லையே..

அன்பன், சிதம்பரம், ஆர்.வீ. பாலா
27.01.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...