Search This Blog

Saturday, January 27, 2018

அம்மா




வாயில் இருந்து வந்த
முதல் வார்த்தை,
வலி வரும் போது
தானாய் எழும் வார்த்தை..

அனைவரையும் விட
அழகாய்த் தெரிவாள்
அனுசரணையோடு
இல்லம் நடத்திடுவாள்..

அவளின் அடுப்பங்கரை
அலுவலகத்தில்
எஜமானியும் அவளே
தொழிலாளியும் அவளே..

ஒவ்வொரு வீட்டிலும்
தன் குழந்தைகளுக்காக
கணவனிடம் தூது
செல்லும் புறா இவளே..

இவளின் வேலைக்கு
என்றும் விடுப்பு இல்லை
அடுப்பு தான் அவளின்
வீட்டின் எல்லை..

ஓயாத வேலையினால்
உடை நனைந்திருக்கும்
சில சமயம் தண்ணீரினால்
பல சமயம் கண்ணீரினால்..

ஈரம் அவள் உடையிலும்
இருக்கும், என்றும்
இவள் நெஞ்சிலும்
இருக்கும்..

அன்னமிடும்
அன்னபூரணி
மணங்கமழும்
சாம்பிராணி..

அம்மாவைப் போலவே
பெண்ணைத் தேடுவதினால்
பல ஆண்களுக்கு திருமணம்
தாமதமாகிறது..

கருவாய் சுமந்தவளும்
கருவை சுமப்பவளும்
இணக்கமாய் கிடைக்கப்
பெற்ற ஆண் புண்ணியவான்..

அன்னையர் தினத்திற்கு
எழுதிய கவிதை, ஆம்
ஆண்டு முழுவதும் எமக்கு
அன்னையர் தினமே..

இனிய மாலை வணக்கம்
அன்பன், ஆர். வீ. பாலா
25.12.16..

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...