அமைதி வேண்டும்
அப்பரும் சம்பந்தரும்
மாணிக்கவாசகரும்
மண்ணுலகில் பிறந்து
மதத்தினை மீட்டனர்..
சமண பௌத்த சமயங்கள்
சீர்குலைத்த போதெல்லாம்
செப்பனிட்டு வாழ்வுதனை
சீரமைத்து தந்தார்கள்..
சமயக் குரவர்கள் செய்த
செம்மையான பணியை
மீண்டும் நாம் ஒன்று கூடி
மீட்டெடுக்க வேளை வருது..
சனாதன தர்மத்திற்கு இன்று
சோதனைகள் வரும் போது
சோர்ந்து நாம் போய்விடாமல்
சேர்ந்து காத்திடுவோம்..
பண்டைய பாரதத்தின்
பெருமையை பறைசாற்ற
சாமானியரும் வேண்டும்
சந்யாசியும் வேண்டும்..
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு
பக்தி இலக்கியங்களின் பங்கு
சங்க காலம் முதற்கொண்டு
தொடர்ந்து வருகின்றது..
அயல் நாட்டு அடிமை சிலர்
அற்பப் பணத்திற்காக
சாதி மத உணர்வை தூண்டி
சிக்கல்களை புரிகின்றார்..
இந்து மதத்தின் துவேஷமும்
பார்ப்பன எதிர்ப்பு கோஷமும்
தலைப்புச் செய்தியிட்டு இன்று
ஊடகங்கள் கூட உரைக்கின்றன..
இட ஒதுக்கீடு என்னும்
இடைஞ்சல் குறுக்கிடவே
படித்த மேல் சாதியர்கள்
மேலை நாட்டில் வேலையிலே..
அரசியல்வாதிகளின்
அநியாய சூழ்ச்சிக்கு
பலியாகி கிடப்பது
பாரதத்தின் மக்களே..
எழுபதாண்டு ஆன பின்னும்
எத்தனை காலங்கள் இன்னும்
இலவசங்கள் வேண்டும் இங்கு
இட ஒதுக்கீடும் வேண்டும்..
புதுப்புதிதாய் காரணம் காட்டி
பொய்யான பிரச்சாரம் இட்டு
அமைதியான மக்களிடம்
நஞ்சை விதைக்கின்றார்..
நாத்திகராய் இருப்பவர் மேல்
நமக்கென்றும் வெறுப்பில்லை
நாத்திகத்தின் போர்வையிலே
நயவஞ்சகமும் குறைவில்லை..
எம்மாநிலத்தும் இல்லாத
இடையூறுகள் எல்லாம்
நம்மாநிலத்தே நடக்கையில்
கண்ணீர் தான் வருகுது..
பெரியார் பெயரைச் சொல்லி
பிளவு படுத்துவோர் எல்லாம்
பெரியோராய் மாறும் நந்நாள்
பாலாவிற்கு கிட்டும் பொன்நாள்..
அமைதி நிலவ வேண்டும்
ஆரவாரம் குறைய வேண்டும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.01.18
No comments:
Post a Comment