அப்பா என்பதற்கு
பதிலாக
ஆவா என்றே
அழைக்கப்பட்டார்,
அறியப்பட்டார்..
வாமன ரூபராய்
தெரிந்தாலும்
வானுயர தம்
பிள்ளைகளை
உயர்த்தி நின்றார்..
நாகம்மையார் தந்த
நம்பிக்கையிலே
நன்றாக, நலமாக
நாள் கழித்தார்..
வருமானம் குறைவானாலும்
தன்மானம் குறையாமல்
வாழ்ந்து வந்தார்..
சதாபிஷேகம் கண்டு
சந்தோஷ வாழ்வு வாழ்ந்த
தெம்மூர் சாம்பமூர்த்தி ஐயர் , ஓர்
சகாப்தம்...
No comments:
Post a Comment