Search This Blog

Saturday, January 27, 2018

ஆலய அர்ச்சகர்



சாதிமத ஒற்றுமைக்காக எழுதப்பட்ட கவிதை வரிகளே தவிர, இது வீண்
விதண்டாவாதத்திற்கு எழுதியதல்ல..


கடையர் ஒருவரை
அர்ச்சிகராக்கி
அழகு பார்த்ததாம்
கேரள அரசு..

ஊடகங்கள் இதை
ஊதிப் பெரிசாக்கும்
விஷயத்தைக் கண்டு
வருத்தம் எமக்கு..

கடவுளைத் தொழாத
கயவர்கள் எல்லாம்
கோவில் பூசையில்
குறுக்கிடுவதேனோ..

அந்தணர்களை
அவமதிப்பதில்
அலாதி ஆசை
அவர்கட்கு உண்டு..

ஆகம விதி உள்ள
ஆலயங்களுக்கு
அந்தணர் முறையே
அர்ச்சிப்பதுண்டு..

காவல் தெய்வங்களாம்
மாரியம்மனுக்கும்
முனீஸ்வரனுக்கும்
பூசை செய்வது யாரோ..

கிராமக் கோவில்களில்
இன்றும் ஆராதிப்பது
அந்தணர் அல்லர்
அடியவர் தானே..

தனியே சட்டங்கள் இயற்றி
சமூக நியதியைக் குலைத்து
அரசியல் செய்வது என்றும்
ஏற்புடையதல்ல..

இளிச்சவாயர்களாய்
இருக்கும் வரையிலும்
இந்து மதத்தினை இவர்
இழிவு படுத்துவர்..

அவரவர் வழியினில்
அவரவர் சென்றால்
அவதிப்படுகின்ற
அவலம் வராது..

🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.10.17

பி.கு: சாதிமத ஒற்றுமைக்காக எழுதப்பட்ட கவிதை வரிகளே தவிர, இது வீண்
விதண்டாவாதத்திற்கு எழுதியதல்ல..











No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...