மெல்ல பேசிடும்
வெள்ளை மனிதர்
புறம் பேசாத மிக
நல்ல மனிதர்..
அதிர்ந்து பேச என்றும்
அவருக்குத் தெரியாது
அவசரத்தில் முடிவேதும்
எடுப்பதும் கிடையாது..
கைரேகை பார்த்து
கணிக்கும் வித்தகர்
பெண்டிர் மொய்க்கும்
பிரபலமான சோதிடர்..
நிதானம் தவறிடாத
நேர்மையானவர், இவர்
நிலைமையினையறிந்து
நடையெடுத்து வைப்பவர்..
செல்ல மகனாக இவர்
சிறப்போடு வளர்ந்தவர்
தாலாட்டிய தந்தையர்க்கு
சேவகித்து வருபவர்..
அன்னையை காத்திட
குடும்பத்தையும் பிரிவார்
சென்னைக்கு அனுப்பி
கடமையும் செய்வார்..
யதார்த்தத்தைப் புரிந்த
இல்லாளும் பெற்றார்
தந்தை சொல் கேட்கும்
செல்வங்களை கொண்டார்..
நிம்மதியான வாழ்வும்
நிறைவான வளமும்
பெற்று தாங்கள் என்றும்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..
💐💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment