சங்கர சங்கர ஜெய ஜெய சங்கர
அனுஷத்தில் அவதரித்த
ஆபத்பாந்தவா
இம்மை வினையருக்கும்
ஈஸ்வர ஸ்வரூபா
உன் சரணடைந்த பக்தர்களின்
ஊறுகளை களைவாய்
எக்கணமும் உனை பணிவேன்
ஏகாந்த மூர்த்தி
ஐயமின்றி உனை நாடிட
ஒரு குறையும் இல்லை
ஓங்கார ஸ்வரூபா என்றும்
ஔஷதமாய் ரக்ஷிப்பாய்..
குருவே சரணம்
காலடி வழியே சரணம்
காஞ்சி மாமுனியே சரணம்
காருண்ய மூர்த்தியே சரணம்
காமகோடி பீடமே சரணம்
காமாக்ஷி ரூபமே சரணம்
கருணா சாகரா சரணம்
கலவையில் இருப்பவனே சரணம்
கவலையை தீர்ப்பவனே சரணம்
ஜகத் குருவே சரணம் சரணம் சரணம்
பரமாச்சாரியார் பதம் பணிவோம்..
🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
17.08.17
No comments:
Post a Comment