Search This Blog

Sunday, February 4, 2018

சுதந்திரம்

சுதந்திரம்

இரவில் வாங்கிய
சுதந்திரம், இது
இரவல் வாங்கிய
சுதந்திரம்..

இந்துஸ்தான் என்றும்
பாகிஸ்தான் என்றும்
இரண்டாக உடைந்த
சுதந்திரம்..

பரங்கியர் செய்த
தந்திரம் இது நம்
பாரதத்தை உடைத்த
எந்திரம்..

இன்னுயிர் ஈந்து
மண்ணினை மீட்க
மாண்டவர் அன்று
சில கோடி..

காஷ்மீர் முதலாம்
குமரி வரையிலும்
தியாகம் செய்தவர்
பல கோடி..

பல மொழிகளால்
பிரிவுகள் இங்குண்டு
ஆனால் பிளவுகள்
அதனால் இங்கில்லை..

சாதி மத பிரிவுகளும்
இங்குண்டு ஆனால்
சகோதரத்துவமாய்
மக்கள் இருப்பதுண்டு..

நதி நீர் பிரச்சினைகள்
நீட் தேர்வு விவாதங்கள்
மீத்தேன் போராட்டம்
மணல் அள்ள திண்டாட்டம்..

நித்தமொரு விவகாரம்
நாட்டிலே நாமதனை
எதிர்கொள்வோம் மிக
எளிதிலே..

தேசிய கீதம் பாடவும் கூட
சட்டம் போடும் நிலைமை
சிறுபான்மையென ஒதுங்குகின்ற
சமூகத்தின் அவல நிலைமை..

தாயிர் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தேசத்தைக் காட்டிலும் சாமியில்லை
தியாகத்தைக் காட்டிலும் உயர்வில்லை..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.08.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...