Search This Blog

Friday, February 23, 2018

பாரும் பாரும்

பாரும் பாரும்

முதியோரைக் குறி வைத்த
மிஷினரிகளின் ஆட்டம்
முடிவுக்கு வரும் நேரம்
நெருங்கியது பாரும்..

சேவை மையம் என்னும்
சால்வைக்குள் ஒளிந்து
சதிகார செயல் பலவும்
நிகழ்த்துவதைப் பாரும்..

சிறுபான்மை என்கின்ற
சந்துக்குள் புகுந்தபடி
சீர் கெட்ட நடத்தைகளை
புரிவதையும் பாரும்..

மதவாதத்தின் பெயரில்
ஊளையிடும் ஊடகங்கள்
ஊமையாய் கிடந்திருக்கும்
அவலத்தைப் பாரும்..

பள்ளிக் கூடங்களை
மருத்துவக் கூடங்களை
சேவை மையங்களாக
காண்பிப்பதைப் பாரும்..

கல்விக்கு கட்டணம்
வசூலிப்பதை விடவும்
எலும்புக்கு விலை வைத்த
வக்கிரத்தைப் பாரும்..

எத்தனை வருடங்கள்
எங்கள் முதியோரின்
தோலைக் கிழித்து
எலும்பினை எடுத்தீரோ ?

தமிழ்த் தாய் வாழ்த்திற்கு
கூச்சலிட்ட தலைவர்கள்
தோலுரித்த கயவர்களை
காணாதது ஏனோ ?

சட்டத்தின் முன்னே
அனைவரும் சமமானால்
வேற்றுமை பார்க்காது
விரைந்து செயல் படவும்..

அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும்
அடிபணிந்து போகாமல் அனைத்து
அரசியல் கட்சிகளும் ஒன்றாய்
அட்டூழியத்தை எதிர்த்திடுங்கள்..

மதத்தின் பின்னால் மறைந்து கொண்டு
மனிதர்கள் பிணத்தை வேட்டையாடிய
சேவை (சாவு) மையங்களுக்கெதிராய்
சவுக்கடி கொடுக்கும் நேரத்தைப் பாரும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.02.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...