ஆளுமையின் பிறந்த நாள்
அம்மா இருந்த வரை
அடங்கியிருந்தவர்கள்
ஆட்டம் போடுவதை
அனைவருமே அறிவோம்..
சாதிவாரியாக நித்தம்
மக்களைப் பிரித்தாள
மூடர்களும் வளர்வதை
மாநிலமே அறியும்..
சிறுபான்மை காவலராக
தெருவெல்லாம் கட்சிகள்
சிதறு தேங்காய்ப் போல
தமிழகத்தில் கோஷ்டிகள்..
சிங்கத்தின் குகைக்குள்ளே
பம்மிக் கிடந்தவர்கள் இன்று
குரலிட்டு திரிவதெல்லாம்
வேடிக்கையாய் இருக்குதம்மா..
உமது வெண்கல சிலை திறந்த
வெள்ளை வேட்டிகள் எல்லாம்
வெறும் வாய் கிழியப் பேசுவது
வேதனையைத் தருகுதம்மா..
ஆட்சியில் நீர் நல்லவரா
அடியேன் விளம்பவில்லை
ஆயினும் தனியொருவராக
ஆளுமையாய் திகழ்ந்தீரே..
இன்னுமொரு ஜெயலலிதா
இச்ஜகத்திற்கு வருவாரோ
தைரியத்தின் துணையோடு
தமிழகத்தை ஆள்வாரோ ??
அரசியலுக்கு அப்பாற்பட்டு
அவரை மிக பிடித்தமையால்
அம்மையாரின் எழுபதாவது
பிறந்த நாளிற்கு எழுதியது..
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.02.18
No comments:
Post a Comment