அவரும் இவரும் 😊😊
தொண்ணூரைத் தாண்டியும்
தொந்தரவு கொடுத்தவர்...
தொண்ணூரைத் தாண்டியும்
தொந்தரவாய் இருப்பவர்...
வாரிசு காணாத வைக்கத்து வீரர்
வாரிசு மாளாத திருக்குவளைக்காரர்
தமிழ் நடையை மாற்றிய திராவிடர்
தமிழன் நடையை மாற்றிய திராவிடர்
ஆதாயத்திற்கு கொள்கை வளர்த்தவர்
அரசியலுக்கு கொள்கை வளர்த்தவர்
அரசியலில் சினிமாவை புகுத்தியவர்
சினிமாவில் அரசியலை புகுத்தியவர்
சாமி இல்லையென இவர்
சாகும் வரை கூவியவர்..
சாமி இல்லையென இவர்
சந்தர்பத்துக்கேற்ப கூறுபவர்..
பேசிப் பேசியே பெரிதாய்
கைத்தட்டலைப் பெற்றவர்
பேச இயலாமல் தற்போது
பிணம் போல வாழ்கிறார்..
எது எப்படியோ....
திருவாரூர் திருமகன்
தில்லையின் மருமகன்
கோபாலபுரத்து கோமகன்
கருப்பு கண்ணாடி நாயகன்
நூறாண்டு காண வேண்டி
மனமார வாழ்த்துகிறேன்..
இருந்தும் இல்லாமல் இன்று
இறந்தவரைப் போல இவர்
இருப்பதைப் பார்க்கையில்
பாவக்கணக்கு தீர்ந்த பின்னே
பரலோகம் செல்வதே இவரது
விதியென்று தோன்றுகிறது..
😊😊😊😊😊😊😊😊😊😊
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.03.18
No comments:
Post a Comment