Search This Blog

Tuesday, March 13, 2018

புரியாத புதிர்

புரியாத புதிர்

காலை சூரியனும் மாலை சந்திரனும்
உதிக்கச் செய்வது யாரு

மரம் செடிகளில் காய் கனிகள் தந்து
உணவுக்கு வழி செய்தது யாரு

ஆறு பருவங்களாய் ஆண்டைப் பிரித்து
வாழ்க்கையை நடத்துவது யாரு

வறட்சியை விரட்ட மழை பொழிவித்து
வையத்தைக் காப்பது யாரு

மணமுடிந்ததும் மகிழ்வுடன் கூடிட
மக்களைத் தருவது யாரு

குழந்தை வயதில் கவலையின்றி
கொண்டாட்டம் தருவது யாரு

பருவ வயதில் மனதை மயக்கி
அலைபாய விடுவது யாரு

வேளா வேளைக்கு பசிக்கச் செய்து
உண்ணத் தூண்டுவது யாரு

வயிற்றுனுள் சென்ற உணவு செரிக்க
வகையாக பிரிப்பது யாரு

புசித்த உணவை போஷாக்கு தந்து
இரத்தத்தில் கலப்பது யாரு

உழைத்த பின்னே களைப்பு தீர
உறங்கச் செய்வது யாரு

பிறந்தோர் ஒருநாள் இறப்பதென்பதை
வழி செய்து விட்டது யாரு

யாரு யாரு யாரு அவர் யாரு யாரு யாரு
நம்மை படைத்தவன் தான் அது பாரு

இயங்கச் செய்வது இயற்கையானாலும்
இயங்கச் செய்வது இறைவனானாலும்
அனைத்தையும் மீறிய ஓர் சக்தி இந்த
அகிலத்தையே ஆட்டுவிப்பதைப் பாரு..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.03.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...