புரியாத புதிர்
காலை சூரியனும் மாலை சந்திரனும்
உதிக்கச் செய்வது யாரு
மரம் செடிகளில் காய் கனிகள் தந்து
உணவுக்கு வழி செய்தது யாரு
ஆறு பருவங்களாய் ஆண்டைப் பிரித்து
வாழ்க்கையை நடத்துவது யாரு
வறட்சியை விரட்ட மழை பொழிவித்து
வையத்தைக் காப்பது யாரு
மணமுடிந்ததும் மகிழ்வுடன் கூடிட
மக்களைத் தருவது யாரு
குழந்தை வயதில் கவலையின்றி
கொண்டாட்டம் தருவது யாரு
பருவ வயதில் மனதை மயக்கி
அலைபாய விடுவது யாரு
வேளா வேளைக்கு பசிக்கச் செய்து
உண்ணத் தூண்டுவது யாரு
வயிற்றுனுள் சென்ற உணவு செரிக்க
வகையாக பிரிப்பது யாரு
புசித்த உணவை போஷாக்கு தந்து
இரத்தத்தில் கலப்பது யாரு
உழைத்த பின்னே களைப்பு தீர
உறங்கச் செய்வது யாரு
பிறந்தோர் ஒருநாள் இறப்பதென்பதை
வழி செய்து விட்டது யாரு
யாரு யாரு யாரு அவர் யாரு யாரு யாரு
நம்மை படைத்தவன் தான் அது பாரு
இயங்கச் செய்வது இயற்கையானாலும்
இயங்கச் செய்வது இறைவனானாலும்
அனைத்தையும் மீறிய ஓர் சக்தி இந்த
அகிலத்தையே ஆட்டுவிப்பதைப் பாரு..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.03.18
No comments:
Post a Comment