Search This Blog

Sunday, March 18, 2018

கலியுகம்

கலியுகம்

இருப்பது சிறையிலே
இல்வாழ்க்கையில்
இணைந்தவரோ
மருத்துவமனையிலே..

தோழியுடன் சேர்ந்து
தமிழகத்தை சுருட்டி
சேர்த்த சொத்துக்கள்
சாக்காடு வாராது..

மக்களை ஏமாற்றி
மன்னார்குடி சேர்த்தவை
தம்பிகள் கையிலே
தாராளமாய்ப் புரளுது..

மணம் முடிக்காமல்
மங்கையவள் கதி போல
வாரிசு இல்லாமல் இந்த
வஞ்சியவள் கதியுமாகும்..

கொள்ளையடிப்போர்க்கு
கைமேல் பலனுண்டு
கலியுகத்தில் என்பதை
கண்கூடாய்க் காணலாம்..

நலிவுற்ற நடராசர்
நலம் பெற்று தேறிட
மனித நேயத்துடன்
மகேசனைப் பணிகின்றேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.03.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...