புது மதம்
உதிர்ந்த திராட்சை
விலை போகாது
பிரிந்த மான் கூட்டம்
உயிர் பிழைக்காது..
ஜைனமும் பௌத்தமும்
பிரிக்க நினைத்தாலும்
இந்து மதம் என்றும்
தேய்ந்ததில்லை..
ஒரு தாய் மக்களாய்
ஓர் மதத்தின் கீழ்
ஒன்றாய் வாழ்ந்த
தலைமுறை நாம்..
சைவம் வைணவம்
சீக்கியம் லிங்காயத்
நாமம் பலவாகினும்
நாம் இந்துக்களே..
பிளவு படுத்தி அதில்
மகிழ்ச்சியுறவே எம்
மதத்தை கையிலெடுக்கும்
மூடர்களே..
பாரதத் தாயின்
பிள்ளைகள் எம்மை
மொழியால் மதத்தால்
பிரிக்காதீர்..
தாய் மதம் விடுத்து
தனி மதம் தந்திடும்
தவறிழைக்கும் செயல்
புரியாதீர்..
மொழியால் பிரித்தோர்
தோற்றுப் போய் இன்று
புது மதங்களை நிறுவப்
பார்க்கின்றீர்..
இஸ்லாமிய கிருத்துவ
சகோதரர்கள் கூட அன்று
எங்கள் மதத்தின் கீழ்
இருந்தவரே..
ஆங்கிலேயர்கள் நமை
அடிமைப்படுத்த அன்று
மொழியால் மதத்தால்
பிரித்தனரே..
அதுபோல் அந்நிய
கைக்கூலிகள் இன்று
அன்னை பாரதத்தை
குலைக்கின்றனரே..
புது மாநிலம் போல
புது மதம் உண்டாயின்
புரட்சியும் வெடிக்கும்
நிலை வருமே..
குழப்பத்தை உண்டாக்கி
குளிர் காயும் மாந்தர்கள்
கும்மாளம் போடும்
நிலை வருமே..
சாதி மதமென்னும்
சடுகுடு ஆட்டத்தில்
சகதியில் வீழ்கின்ற
நிலை வேண்டாம்..
அமைதி வேண்டும்
ஆரோக்கியம் வேண்டும்
மத நல்லிணக்கத்துடன்
மண் மலர வேண்டும்..
வருத்தமும் வேதனையும்..
😢😢😢😢😢😢
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.03.18
No comments:
Post a Comment