உலக தண்ணீர் தினம்
கொட்டிய தண்ணீர்
மெல்ல மெல்ல
சொட்டிய தண்ணீர்
ஆயிற்று..
குளத்தில் முங்கி
குளித்தது போயி
குடத்தில் மொண்டு
எடுப்பதாயிற்று..
வானத்து மழை நீர்
மண்ணில் தங்காது
கடலினில் கலப்பது
கொடுமையாகும்..
அணைகளைக் கட்டி
அரவணைக்காமல்
அநியாயமாய் நீரை
வீணடிக்கின்றோம்..
மண்ணை சுரண்டும்
பாவிகள் நீவீர்
நிதானமாக சற்றே
சிந்திப்பீர்..
நீரைத் தேக்கிடும்
மண்ணும் மறைய
மலடாய்ப் போய்விடும்
நிலங்களுமே..
நாளைய தலைமுறை
நீரைத் தேடி நித்தம்
நாயாய் அலைந்திடும்
நிலை வருமே..
மூன்றாம் உலகப் போர்
மூளும் நிலை கூட இனி
நீரால் வருமென்று
உரைப்பனரே..
மரம் வளர்ப்பின்
காற்று வரும்
மரத்தின் வேரால்
நீர்த் தேக்கம் பெரும்..
கால்வாய் குட்டைகள்
தூறும் வாரிட்டால்
நீரும் தேங்கி நன்கு
செழிப்பாகும்..
மழைநீர் சேமிக்க
முனைந்திடுவோம்
மனையைச் சுற்றி
மண் இடுவோம்..
கான்க்ரீட் காட்டினுள்
மண்ணை மறைத்தால்
தண்ணீர் குறைந்து
கண்ணீரே மிஞ்சும்..
நீரை சேமித்திட
சபதமேடுப்போம்
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
இன்று உலக தண்ணீர் தினம்..
🌳🌳🌳🌴🌴🌴🌦🌦🌦⛈⛈⛈
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.03.18
No comments:
Post a Comment