சிறு சிந்தனைகள்
தகராறு கொள்ளாத ஓர்
தாம்பத்யமே நாளைய
தரணியை உயிர்ப்பிக்கும்
ஓர் வைத்தியமே..
குறைந்த ஊதியத்திலும்
நிறைந்த மனதுடனே
நேர்மையாய் வாழ்ந்திடும்
நல்லோரே மேலோர்..
பசித்தோர்க்கு ஒருவேளை
புசிக்கச் செய்வது கோவிலில்
பகவானைத் தொழுவதை விட
புண்ணிய செயலாகும்..
கற்ற கல்வியை முறையே
செருக்கேதும் கொள்ளாமல்
மற்றோர்க்கு போதிப்பதென்பது
பெற்ற பிறப்பின் மகத்துவமாகும்..
நோயுற்று கிடந்தாலும்
நலிந்து போயிருந்தாலும்
முதிய பெற்றோர்களை
பேணுவதே புண்ணியம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.03.18
No comments:
Post a Comment