Search This Blog

Wednesday, March 28, 2018

சிறு சிந்தனைகள்

சிறு சிந்தனைகள்

தகராறு கொள்ளாத ஓர்
தாம்பத்யமே நாளைய
தரணியை உயிர்ப்பிக்கும்
ஓர் வைத்தியமே..

குறைந்த ஊதியத்திலும்
நிறைந்த மனதுடனே
நேர்மையாய் வாழ்ந்திடும்
நல்லோரே மேலோர்..

பசித்தோர்க்கு ஒருவேளை
புசிக்கச் செய்வது கோவிலில்
பகவானைத் தொழுவதை விட
புண்ணிய செயலாகும்..

கற்ற கல்வியை முறையே
செருக்கேதும் கொள்ளாமல்
மற்றோர்க்கு போதிப்பதென்பது
பெற்ற பிறப்பின் மகத்துவமாகும்..

நோயுற்று கிடந்தாலும்
நலிந்து போயிருந்தாலும்
முதிய பெற்றோர்களை
பேணுவதே புண்ணியம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.03.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...