பிரகாஷ்
எனதருமை மருமகனே
என் படைப்புகளை நீ
படித்து பாராட்டு நல்கிடவே
பெருமையாய் இருக்குதடா
பாராட்டு பெற்றமையால் அல்ல
பாராட்டும் நின் புலமையால்
புளகாங்கிதம் அடைந்தேனடா
பிரகாஷ் எனும் பெயருக்கேற்ப
உன் மாமனின் வரிகளுக்கு
வெளிச்சத்தை காட்ட இன்று நீ
விழைந்தாயோ ?
சிதம்பரத்தில் நீ பிறந்து
சென்னையிலே தவழ்ந்து
சேலத்தில் படித்த எங்கள்
செல்லக் குட்டி நீ தானே
ரோகிணியில் பிறந்த
ராஜலட்சுமி மகனே உனை
மாமன் அன்று பார்ப்பதற்கு
மூன்று தினங்கள் ஆனதடா
செல்லாயி இட்ட பிச்சை
சேலத்தில் பெற்ற சிக்ஷை
சென்னையின் கல்லூரியில்
வேரூன்றியது உன் பாதரக்ஷை
நின் தந்தையின் கனவிற்கேற்ப
நிறுத்தாமல் மேல் படித்து நீ
ஆடிட்டர் ஆக வேண்டும்
அதுவே உன் அன்னை ஆசை
கணக்குப் பிள்ளையாக
கண்டனூரான் சோர்ந்திடாமல்
தணிக்கையாளராய் தளராமல்
கண்ணே நீ மேல் வருவாய்.
வாழ்க நீ பல்லாண்டு
வளர்க நின் தமிழ்த் தொண்டு
என்றும் அன்புடன்
உன் தாய்மாமன்
ஆர்.வீ. பாலு..
No comments:
Post a Comment