திவாகர்
வரதக்குட்டி மாமாவின்
ஜ்யேஷ்ட பௌத்ரன்
வேகனிசத்தை பரப்பிடும்
சிரேஷ்ட ரௌத்ரன்..
வெள்ளைத் தோல்
திவாகருக்கு ஏனோ
வெள்ளையின் மேல்
அடங்காத வெறுப்பு..
கவர்ந்திழுக்கும் கூறிய
பேச்சால் அனைவரையும்
தன்பால் கட்டி இழுக்கும்
கண்மணி நீயடா..
எதுவும் தெரியாதென சொல்ல
உனக்கு என்றுமே தெரியாது
அனைத்திலும் முயற்சிக்கும்
அஷ்டாவதானி நீயடா..
நேமான இல்லத்தாரைப் போல
நொடி நேரத்தில் நீ கோபிப்பாய்
சத்தியமூர்த்தியார் மகனே நீ
சடுதியில் சாந்தமும் அடைவாய்..
தந்தையின் திறன் போன்று
வாத்தியத்தில் கைத்தேறி
தாயினது திறன் போன்று நீ
வாய்ப் பேச்சிலும் தேறினவன்..
முன்கோபமும் முரட்டுத்தனமும்
முந்திக் கொண்டு வந்தாலும் நீ
பெரியவர்களை மதித்திடும்
பிள்ளையாகவே உள்ளாய்..
பிடித்த விஷயத்தில்
மனதினை திருப்பு
படித்த அறிவினை
மக்களிடம் பரப்பு..
எங்கள் சொந்தம் இவனென்று
உற்றார் உனை உரைத்துக் கூறுவர்
எவரையும் அனைத்து நீ சென்றால்
உலகமே உனை உயர்த்தி கூறும்..
தாய் தந்தை சொல் கேட்டு
தங்கமே நீ அமைதியுறு
தம்பியுடன் ஒன்று சேர்ந்து
தரணியில் தலை நிமிரு..
இந்த இனிய பிறந்த நாளில்
உன் மாமனது அன்பு கலந்த
ஆசிகள்..
வாழ்க வளர்க 💐💐💐💐
No comments:
Post a Comment