Search This Blog

Saturday, April 7, 2018

விடுமுறை எடுப்போம்

விடுமுறை எடுப்போம்

நேரில் பார்த்து
பேசுவது குறைந்து
தொலைபேசியில்
அழைத்து உரையாடியதும்
மறைந்து மெல்ல மெல்ல
குறுஞ்செய்திகள் மூலமே
உறவாடுகின்ற வழக்கம்
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

நலம் விசாரிப்புகளும்
நண்பர்கள் வாழ்த்துகளும்
நல்லதும் கெட்டதும் மற்ற
நாட்டு நடப்புகளும் என்று
எல்லாவற்றுக்கும் சேர்த்து
நான்கைந்து வரிகளுக்குள்
தட்டச்சில் செய்தி பகிர்வது
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

முகம் மறந்து போயாச்சு
அகம் மறைத்து வாழ்ந்தாச்சு
கூடி வாழ்ந்த நாட்களெல்லாம்
குறுகிப் போய் அரியதாகி
சொந்தம் தொலைத்துவிட்டு
விலாசத்தை தேடுகின்ற
வேடிக்கை மாந்தர்களும்
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

வாட்ஸப்பு முகநூல் ட்விட்டர்
எனும் பெயரில் தினமும்
அரட்டையடிக்கும் மக்களும்
சமூக வலைதளம் என்னும்
சந்துக்குள் நுழைந்துவிட்டு
திரும்ப வரும் வழித்தெரியா
திணறுகின்ற கூட்டங்களும்
பெருகுவதைக் காணவே
வேதனையாய் இருக்குது..

அமைதியாய் வாழுங்கள்
ஆரவாரத்தை குறையுங்கள்
அகம் மகிழ்ந்து முகமலர்ந்து
ஆதரவாய் சற்று பேசுங்கள்
வார விடுமுறை போலவே
வலைதள விடுமுறையும் வைத்து
உற்றார் உறவினரோடு கொஞ்சம்
வெளியே சென்று மகிழுங்கள்
உறவாடி திளையுங்கள்..

முயற்சியில் இறங்க முயற்சிக்கிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.04.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...