ஈஸ்வரா
அனைத்துமாகி நிற்கும்
அம்பலவா போற்றி
ஆலகால விடமுண்ட
அண்ணாமலையே போற்றி
இமையவள் உடனிருக்கும்
இலிங்க ரூபமே போற்றி
ஈரேழு லோகம் காக்கும்
ஈஸ்வரனே போற்றி
உடலை சரிபாதி பகிர்ந்த
உமாபதியே போற்றி
ஊழிக்காலத்தே உய்விக்கும்
ஊர்த்துவ தாண்டவமே போற்றி
எம பயம் தீர்த்து அருளும்
எம் ஈசனே போற்றி
ஏகாந்தமாய் உறைந்துள்ள
என்னப்பனே போற்றி
ஐந்தெழுத்து மந்திரத்து
ஐயனே போற்றி
ஒளிமயமாய் நிறைந்துள்ள
ஓங்காரமே போற்றி போற்றி
உலகெலாம் உணர்ந்து
ஓதற்கு அறியவனை
உயிரெழுத்தில் பணிந்து
ஓசையின்றி வரிகளிட்டேன்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ்
நடராஜனே 🙏🙏🙏🙏
* இன்றைக்கு சிவராத்திரியும் இல்லை, பிரதோஷமும் இல்லை. இருப்பினும்
என் அப்பனை நினைத்த நேரத்தில்
எழுதும் ஆவல் மட்டும் அடங்கவில்லை.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.04.18
No comments:
Post a Comment