Search This Blog

Saturday, April 7, 2018

ஈஸ்வரா

ஈஸ்வரா

அனைத்துமாகி நிற்கும்
அம்பலவா போற்றி
ஆலகால விடமுண்ட
அண்ணாமலையே போற்றி

இமையவள் உடனிருக்கும்
இலிங்க ரூபமே போற்றி
ஈரேழு லோகம் காக்கும்
ஈஸ்வரனே போற்றி

உடலை சரிபாதி பகிர்ந்த
உமாபதியே போற்றி
ஊழிக்காலத்தே உய்விக்கும்
ஊர்த்துவ தாண்டவமே போற்றி

எம பயம் தீர்த்து அருளும்
எம் ஈசனே போற்றி
ஏகாந்தமாய் உறைந்துள்ள
என்னப்பனே போற்றி

ஐந்தெழுத்து மந்திரத்து
ஐயனே போற்றி
ஒளிமயமாய் நிறைந்துள்ள
ஓங்காரமே போற்றி போற்றி

உலகெலாம் உணர்ந்து
ஓதற்கு அறியவனை
உயிரெழுத்தில் பணிந்து
ஓசையின்றி வரிகளிட்டேன்.

திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ்
நடராஜனே 🙏🙏🙏🙏

* இன்றைக்கு சிவராத்திரியும் இல்லை, பிரதோஷமும் இல்லை. இருப்பினும்
என் அப்பனை நினைத்த நேரத்தில்
எழுதும் ஆவல் மட்டும் அடங்கவில்லை.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.04.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...