வாழ்த்த வேண்டுகிறேன்
சும்மா இருக்க என்னால்
இயலவில்லை, என்றும்
சோம்பேறியாய் அமர
விருப்பமில்லை..
அன்றன்று நடந்திடும்
நிகழ்வுகளை எனது
வார்த்தையில் வடித்து
விவரிக்கிறேன்..
மனதிலே உதித்திடும் என்
உணர்வினை வரிகளில்
கவிதையாய் கண்முன்னே
காட்டுகிறேன்..
தமிழ் ரசிகராய் ருசிகொண்டு
தாம் இடும் உற்சாகம் என்
தாகத்தை மென்மேலும்
தூண்டிடுமே..
தடையின்றி பிரவாகமாய்
தடாகத்து நீர் போன்று
தமிழ் வார்த்தை பா வாக
தெளித்திடுவேன்..
உற்றாரும் சுற்றாரும்
உற்சாகம் தந்திடவே
ஊர் மெச்சும் அளவுக்கு
கவி புனைவேன்..
சங்கடமாய் சில நேரம்
சகட்டு மேனிக்கு நான்
சங்கதிகள் பல சேர்த்து
கவிதையிட்டேன்..
தொந்தரவாய் எண்ணாமல்
தோள்கொடுக்கும் விதமாக
ஊக்கம் தரும் அன்பர்களை
நான் மறவேன்..
கற்பனைகள் வளர வேண்டி
புத்தகங்கள் படித்திடுவேன்
நல்மனங்கொண்ட மாந்தரின்
நேசம் அமைத்து கொள்வேன்..
வாழ்த்துக்கள் வேண்டி
வணங்கி விடை பெறும்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18
No comments:
Post a Comment