Search This Blog

Sunday, April 29, 2018

சித்திரகுப்தன்

சித்திரகுப்தன்

ஆலைக்கென்று
கணக்குப்பிள்ளை
உண்டு, அவர்
வரவு செலவு
விவரம் எழுதுவாறு..

அகிலத்துக்கென்று
கணக்குப்பிள்ளை
உண்டு, அவர்
பாவ புண்ணிய
விவரம் எழுதுவாறு..

நல்லது செய்யினும்
தீயவை செய்யினும்
நியாயமாய் அவரவர்
கணக்கிலே சேர்ப்பார்..

சொர்க்கமும் நரகமும்
தேர்வு செய்ய வேண்டி
எமதர்ம ராஜனுக்கிவர்
உதவி செய்வார்..

சிந்தை கலங்காது
சிவனை மனமிருத்தி
செய்யும் தொழிலிலே
செம்மை செய்வார்..

கணநேரம் தப்பாது
காலனுக்குதவிடும்
சித்திரகுப்தன் என்பது
திருப்பெயராம்..

சித்ரா பௌர்ணமி
நந்நாளில் துதித்திட
செம்மை வாழ்வினை
நல்கிடுவார்..

பிறவிக் கடல் கடந்து
பரலோகம் செல்கையிலே
பாவ புண்ணியத்தை
பிரித்து வைப்பார்..

எம பயம் இல்லாமல்
நல்வாழ்வு வாழ்ந்திட
பரமனை திடமாக
பற்றிடுவோம்..

சீரான வாழ்க்கையும்
வேராக அமைந்திட
சித்திரகுப்தனின்
அடிபணிந்திடுவோம்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...