Search This Blog

Tuesday, May 1, 2018

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

உழைப்புக்கு ஏற்ற
ஊதியம் இல்லை
வியர்வைக்கு ஏற்ற
உயர்வும் இல்லை..

காக்கிச் சட்டைக்கு
சொந்தக்காரன், நிதம்
கடின உழைப்புக்கு
குத்தகைக்காரன்..

இவன் முதலாளிக்கு
என்றும் முதுகெலும்பு,
உழைத்து தேய்ந்திடும்
அவனது குறுத்தெலும்பு..

விடுப்பு எடுக்காது
வேலையும் செய்திட
அடுப்பும் எரிந்திடும்
இவன் இல்லத்தில்..

வேலைக்கு பங்கம்
வராமல் இருந்திட
சங்கம் அமைத்து
ஒன்றாய் இருப்பர்..

போற்றி வணங்குவோம்
தொழிலாளர்களை, அவர்க்கு
உரிய ஊதியத்தையும் அளித்து மகிழ்ந்திடுவோம்..

வாழ்க தொழிலாளர் நலம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
01.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...