மலரே மடலே
நீ எழுதும்
வரிகளுக்குள்
வார்த்தையென
வைத்து விடு..
நினைவு கொண்டு
எழுதுகையில்
நெஞ்சொடு எனை
சுமந்துவிடு..
தீராத மையாக நான்
தங்கமே துணையிருப்பேன்
பாராத உன்னிடத்தில்
பக்கங்களை நிரப்பிடுவேன்..
கூறாத வார்த்தையினை
கோலெழுத்தில் கூறி விடு
காணாத உன்னழகினை
கருத்தினில் நீ இட்டு விடு..
மலரே உன் மௌனத்தை
மடலெழுதி கலைப்பாயா
மனதில் நீ எனையிருத்தி
மகிழ்ச்சியிலே திளைப்பாயா..
கைப்பேசி இல்லாத காலம்
குறுஞ்செய்தி வாராத காலம்
தபால்காரர் வரவினை பார்த்து
வழி மேல் விழி வைத்த காலம்..
காதலியின் கடுதாசிக்கு
கால்கடுக்க ஏங்கி நிற்கும்
காதலனின் வரி(லி)கலாக
பதிவு செய்ய ஆசையுற்றேன்..
💐💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.05.18
No comments:
Post a Comment