Search This Blog

Monday, May 28, 2018

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

விடுமுறை என்றாலே
வீட்டில் விசேஷம் தான்

குட்டிச் சுட்டிகளுக்கு
கும்மாளமோ கும்மாளம்
நினைத்தபடி உறங்களாம்
நேரங்கடந்து எழுகலாம்..

வீட்டுப் பாடங்கள் இல்லை
வகுப்பு தொல்லையில்லை
வாய்க்கு நல்ல ருசியாக
வகையாக புசித்திடலாம்..

வெயிலில் திரிந்திடலாம்
வீதியில் அலைந்திடலாம்
நண்பர்களுடன் சேர்ந்து
நாள்முழுதும் சுற்றிடலாம்..

கல்லாங்காய் கிட்டி புல்லு
கண்ணாமூச்சி கோலியென
கபடி கிரிக்கெட்டும் சேர்த்து
காலத்தையும் ஓட்டலாம்..

பச்சை குதிரை
நொண்டி ஆட்டம்
நீச்சல் அடித்தும்
குஷிக்கலாம்..

உறவினர்கள் வீட்டிற்கு
உற்சாகமாய் போகலாம்
விருந்துகள் பல உண்டு
வாய் ருசிக்க மகிழலாம்..

அய்யகோ !!!!!

கோடை விடுமுறை
கூடிய விரைவில்
முடிவுக்கு வருகுதே
கவலையை தருதே..

இரண்டு மாதங்கள்
இன்பமாய் கழிந்தது
பத்து மாதங்கள் பின்
பாரமுடன் கழியும்..

வேலைக்கு சேர்ந்த பின்னே
விடுமுறை இருப்பதில்லை
வீட்டில் இருந்தாலும் நமக்கு
உற்சாகம் பிறப்பதில்லை..

எதையோ தேடியபடி
எதையும் இழந்தபடி
ஏமாற்றமாய் நகரும்
ஏகாந்த வாழ்க்கை..

குழந்தைகளே ! மாணவர்களே !

அனுபவித்து வாழுங்கள்
அனுதினமும் ரசியுங்கள்
கழிந்த நொடி மீண்டும்
திரும்ப வருவதில்லை..

ஆண்டராய்டு போனில்
அடைபட்டு இருக்காமல்
அக்கம் பக்கத்தாருடன்
அளவளாவி கூடுங்கள்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...