Search This Blog

Saturday, May 26, 2018

அம்மா

 அம்மா

எங்கே போய் விட்டாய்
நீ அம்மா ??

நீ இல்லாத நேரத்திலே
தினம் ஒரு போராட்டம்
புதுசு புதுசா கட்சிகள்
தினுசு தினுசா காட்சிகள்..

ஆலைக்கெதிரா
போர்க்கொடி
அரசுக்கெதிராவும்
போர்க்கொடி..

எதிர் கட்சிகள்
எதிரி கட்சிகளாகி
போராட்ட களத்தில்
கைகோர்த்து நிற்குது..

விலாசம் இல்லாத
வெட்டிப் பயலுகளும்
வீதிக்கு வந்து நித்தம்
போராடி வருகின்றனர்..

மறியல் நடக்காத
மாவட்டம் இல்லை
வம்போன்றும் காணாத
ஊரெதுவும் இல்லை..

இனம் புரியா கிளர்ச்சியும்
வகையறியா புரட்சியும்
தினந்தோறும் இங்கு
வாடிக்கையாகுது..

நேற்று முளைத்த காளான் கூட
கோட்டையின் கனவு காண்கிறது
தமிழனை முட்டாள் என நினைத்து
தேசத்தை பிரிக்க நினைக்கிறது..

அடங்கி கிடந்த தலைகளெல்லாம்
ஆட்டம் போட்டு அலைகின்றன
அம்மா நீ இல்லா துணிவில் இன்று
அட்டகாசம் செய்கின்றன..

தமிழகத்தை வழிநடத்த உனது
தம்பிகள் முயன்று வருகின்றனர்
தினமும் காணும்  சவால்களால்
தடுமாறித்தான் போகின்றனர்..

இரும்புக் கரம் கொண்டு
அடக்கி ஆண்ட இதயமே !!!

மெரினாவில் நடக்கும்
போராட்டத்தை சற்றே
துயில் களைந்து நீயும்
வெளியே வந்து பார்..

விழி பார்வையில் நீ
வழி நடத்தி வந்தாய்
வழி அறியாமல் இன்று
வலி சுமந்து உள்ளோம்..

கம்பீரமே !!!!

உனது அதிகாரத்தில் தமிழகம்
அன்று கட்டுப்பட்டு இருந்தது
இன்று நீ இல்லாத தருணத்தில்
வெட்டுப்பட்டு கிடக்குது..

கட்சித் தொண்டனாக
நான் இதை எழுதவில்லை
நின் நிர்வாகத் திறன் வியந்து
எழுத நினைத்தேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...