Search This Blog

Saturday, June 16, 2018

முடி திருத்தகம்

முடி திருத்தகம்

முடி திருத்தம் செய்து கொள்ள
கடைக்குள் நான் அடி வைத்தேன்
எனக்கு முன்னே வந்தோரெல்லாம்
அழைப்புக்காக இருக்க கண்டேன்.

தொலைகாட்சி ஒரு மூலையில்
அலறிக் கொண்டு இருந்தது
செய்தித்தாள்கள் இங்குமங்கும்
கசங்கியபடி சிதறிக் கிடந்தது.

ஆங்காங்கே வெட்டப்பட்ட முடி
அசிங்கமாக பரவிக் கிடந்தது
சவரம் செய்த நுரை பொங்கி
சேர்ந்து ஓர் ஓரமாய் இருந்தது.

சிறியோர் பெரியவர் ஆனமாதிரி
பெரியோர் சிறியவர் ஆனமாதிரி
கட்டிங் முடிந்ததுமே தனக்குள்ளே
கனாப் பல காண்பதுண்டு.

முடி திருத்தம் செய்த பின்னே
மன்மதனாகி விடுவதாக அங்கு
மனதிற்குள் ஆயிரம் கற்பனை
சுமந்தோர் அநேகம் கண்டேன்.

ஸ்டேப் கட்டிங், மாஸ்டர் கட்டிங்
ஆர்மி ஸ்டைல், மெஷின் கட்டிங்
நடிகர்கள் மாதிரி தினுசாக வேறு
ஹேர் கலரிங் இத்யாதி இத்யாதி.

ஒவ்வொருவர் விருப்பத்தையும்
ஒதுக்காமல் மகிழ்ந்தபடி அங்கு
ஒரே ஒரு கத்திரிக்கோலால்
ஒப்பனை செய்து வந்தார்.

கட்டிங் ஆன பிறகு அங்கே
கண்ணாடியைப் பார்த்தபடி
நெடுநேரம் அழகு பார்க்கும்
முகங்கள் அதிகமெனலாம்.

சாதிமத வேறுபாடில்லாமல்
சமத்துவமாய் சேருமிடம்
மூச்சிருக்கும் போது சலூன்
மூச்சடங்கும் போது சுடுகாடு.

முகத்தின் அழகைத் கூட்ட
முப்போதும் முயன்றாலும்
அகத்தின் அழகு கொண்டே
எப்போதும் உயர்வடைவோம்.

சலூன் கடையில் இருந்த போது
சந்தடிசாக்கில் எனக்குள்ளிருந்து
சிதறிய சில வரிகள் 😊😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...