சோமவார பிரதோஷம்
ஈசனே
இடைவிடாது உனை
இறைஞ்சி நின்றும்
இறைவா ஏக்கம்
அகலவில்லை
நடராஜனே
நியமமாய் உனை
நெக்குறுக துதித்தும்
நெஞ்சம் நிறைவு
கொள்ளவில்லை
உமாபதியே
உள்ளும் புறமும்
அல்லும் பகலும்
வணங்கி நிற்பினும்
வேதனை குறையவில்லை
சதாசிவமே
சகலமும் நீ என்று
சர்வேஸ்வரன் உனை
சரணாகதி அடைந்தும்
சஞ்சலம் தீரவுமில்லை
சோமாஸ்கந்ததா
சோமவார பிரதோஷத்தில்
சாயங்கால வேளையிலே
சந்நிதியில் வலம் வந்தும்
சங்கடங்கள் தீரவில்லை
பரமேஸ்வரா
பாவம் தீர வேண்டி நிதம்
பணிந்து நானிருப்பேன்
பக்தன் பாலன் எனை நீயும்
ஆட்கொள வேண்டுகிறேன்..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.06.18
No comments:
Post a Comment