Search This Blog

Monday, June 25, 2018

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்

ஈசனே

இடைவிடாது உனை
இறைஞ்சி நின்றும்
இறைவா ஏக்கம்
அகலவில்லை

நடராஜனே

நியமமாய் உனை
நெக்குறுக துதித்தும்
நெஞ்சம் நிறைவு
கொள்ளவில்லை

உமாபதியே

உள்ளும் புறமும்
அல்லும் பகலும்
வணங்கி நிற்பினும்
வேதனை குறையவில்லை

சதாசிவமே

சகலமும் நீ என்று
சர்வேஸ்வரன் உனை
சரணாகதி அடைந்தும்
சஞ்சலம் தீரவுமில்லை

சோமாஸ்கந்ததா

சோமவார பிரதோஷத்தில்
சாயங்கால வேளையிலே
சந்நிதியில் வலம் வந்தும்
சங்கடங்கள் தீரவில்லை

பரமேஸ்வரா

பாவம் தீர வேண்டி நிதம்
பணிந்து நானிருப்பேன்
பக்தன் பாலன் எனை நீயும்
ஆட்கொள வேண்டுகிறேன்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...