Search This Blog

Sunday, June 24, 2018

புகைப்படம்

புகைப்படம்

புகைப்படப் பதிவு
வேண்டாமென்றும்
வீடியோ எடுக்கக்
கூடாதென்றும்
ஆயிரம் முறைகள்
அடித்துக் கூறினும்
அயோக்கியர்கள்
அடங்குவதில்லை
நிழலைப் பார்த்து
நிம்மதி அடைந்து
நிஜத்தின் அருமையை
உணருவது இல்லை
செல்போன் ஒன்றை
செல்லமாய் அணைத்து
ஸ்வாமி படங்களை
க்ளிக்கிடுகிறார்கள்..

எங்கு போய் சொல்வது
எவரிடம் முறையிடுவது
எல்லாம் அவன் செயல்..

வருந்துகிறேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...