புகைப்படம்
புகைப்படப் பதிவு
வேண்டாமென்றும்
வீடியோ எடுக்கக்
கூடாதென்றும்
ஆயிரம் முறைகள்
அடித்துக் கூறினும்
அயோக்கியர்கள்
அடங்குவதில்லை
நிழலைப் பார்த்து
நிம்மதி அடைந்து
நிஜத்தின் அருமையை
உணருவது இல்லை
செல்போன் ஒன்றை
செல்லமாய் அணைத்து
ஸ்வாமி படங்களை
க்ளிக்கிடுகிறார்கள்..
எங்கு போய் சொல்வது
எவரிடம் முறையிடுவது
எல்லாம் அவன் செயல்..
வருந்துகிறேன் எழுதுகிறேன்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.06.18
No comments:
Post a Comment