மணநாள் வாழ்த்து
ஆண்டுகள் பல கடந்தும்
அலுக்காத உறவென்றால்
குடும்ப உறவினைத்தான்
கோடிட்டு குறிப்பிடுவேன்..
வெளியே சென்ற பின்னே
வீடு திரும்பியதும் முதலில்
நம் கண்கள் தேடுவது தமது
கட்டிய மனைவியைத் தான்..
கால் பாதி தாய் வளர்த்து
மிச்சத்தில் தாரம் வளர்த்து
முப்போதும் பெண் வளர்ப்பில்
கழிகின்றது ஆண் வாழ்க்கை..
மகிழ்ச்சியாக வாழ்ந்திடவே
மனைவியை நேசியுங்கள்
அலுவலக அழுத்தங்களை
அவளிடம் தவிர்த்திடுங்கள்..
அழுகுரல் ஒலிக்கும் வீட்டினை
அஷ்டலக்ஷ்மியும் நீங்கிடுவாள்
அரவணைத்து ஆனந்தமாய் வாழ
ஐஸ்வர்யமும் பெருக்கிடுவாள்..
அம்மையப்பனாய் நாம்
அருமையாய் வாழ்ந்திட
இல்வாழ்வும் சிறக்கும்
நல்வாழ்வும் பிறக்கும்..
பன்னிரு வருடங்கள் கழிந்தும்
பிணைப்போடு வாழ்கின்றேன்
மணநாள் வாழ்த்திற்க்காக நான்
மனமார பணிகின்றேன்..
💐💐💐🙏🙏🙏👏👏👏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.06.18
No comments:
Post a Comment