பொன்விழா மடல்
பஞ்சாட்சர படியேறும்
புண்ணிய மூர்த்தியே
பரமசிவனை பூசிக்கும்
பேரருள் கீர்த்தியே
தில்லைவாழ் அந்தணராய்
திவ்யமாய் பிறப்பெடுத்து
தூக்கிய திருவடியை நிதம்
தொழுதிடும் பாக்கியமே
சபாநாயக மூர்த்தியை
சிரத்தையாய் பூசிக்கும்
சந்ததியை சார்ந்தவரை
சிரந்தாழ்த்தி பணிகின்றேன்
உமாநாத தீக்ஷிதரின்
ஜெயேஷ்ட புத்திரரே
தானியம்மை கரம்பிடித்த
சிரேஷ்ட பொக்கிஷமே
பொன்விழா காணும்
பொது தீக்ஷிதர் ஐயா
பல்லாண்டு நீர் வாழ
பரமனருள் புரியட்டும்
ஆறுகால பூசை செய்யும்
ஐயப்பன் சபேசன் ஐயா
ஆடல் வல்லான் அருளோடு
ஆயுசு நூறு வாழ்ந்திடனும்.
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் பாதம் பணியும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.06.18
No comments:
Post a Comment