Search This Blog

Wednesday, June 27, 2018

பொன்விழா மடல்

பொன்விழா மடல்

பஞ்சாட்சர படியேறும்
புண்ணிய மூர்த்தியே
பரமசிவனை பூசிக்கும்
பேரருள் கீர்த்தியே

தில்லைவாழ் அந்தணராய்
திவ்யமாய் பிறப்பெடுத்து
தூக்கிய திருவடியை நிதம்
தொழுதிடும் பாக்கியமே

சபாநாயக மூர்த்தியை
சிரத்தையாய் பூசிக்கும்
சந்ததியை சார்ந்தவரை
சிரந்தாழ்த்தி பணிகின்றேன்

உமாநாத தீக்ஷிதரின்
ஜெயேஷ்ட புத்திரரே
தானியம்மை கரம்பிடித்த
சிரேஷ்ட பொக்கிஷமே

பொன்விழா காணும்
பொது தீக்ஷிதர் ஐயா
பல்லாண்டு நீர் வாழ
பரமனருள் புரியட்டும்

ஆறுகால பூசை செய்யும்
ஐயப்பன் சபேசன் ஐயா
ஆடல் வல்லான் அருளோடு
ஆயுசு நூறு வாழ்ந்திடனும்.

💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

தங்கள் பாதம் பணியும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...