பாலகவி
நித்தமும் நடக்கும்
விஷயங்களை நான்
கவி நடையில் சற்றே
வடிக்க நினைத்தேன்
உணர்வினை வெளியிட
உணர்ச்சியை பகிர்ந்திட
ஊடகமாய் கவிதையை
கையிலெடுத்தேன்
எதுகை மோனையிட்டு
எகத்தாளம் கூட சேர்த்து
சிந்தனையை சிதறடிக்க
சின்னதாய் ஆசையுற்றேன்
பைத்தியம் இவனென்று
படிப்போர் நினைத்தாலும்
பா எழுதும் என் ஆசையோ
பெறுகவே செய்கிறது
சிந்தையை நிறுத்தி
சிவனை நினைத்து
சரம்சரமாய் வரிகளில்
சஞ்சரிக்கலானேன்
அரசியல் சமூகம்
ஆன்மீகம் காதலென்று
அழகான வார்த்தைகளால்
அடுக்கிக் கொண்டு போனேன்
தட்டிக் கொடுப்போரும் கூடவே
தலையில் குட்டு வைப்போரும்
விமர்சனங்கள் செய்திடினும்
விமரிசையாய் எழுதலானேன்
எழுதிய கவிதைகளை
ஏட்டினில் பதிவிடவே
முயற்சியும் மேற்கொள்ள
முனைந்திட நானுள்ளேன்
ஊக்கம் பெறுவதினால்
உற்சாகமாய் படைப்பேன்
உள்ளத்து கற்பனையை
ஊற்றாக பெருக்கிடுவேன்
ஆசி கோரும் அன்பன்
சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.06.18
No comments:
Post a Comment