Search This Blog

Tuesday, June 26, 2018

பாலகவி

பாலகவி

நித்தமும் நடக்கும்
விஷயங்களை நான்
கவி நடையில் சற்றே
வடிக்க நினைத்தேன்

உணர்வினை வெளியிட
உணர்ச்சியை பகிர்ந்திட
ஊடகமாய் கவிதையை
கையிலெடுத்தேன்

எதுகை மோனையிட்டு
எகத்தாளம் கூட சேர்த்து
சிந்தனையை சிதறடிக்க
சின்னதாய் ஆசையுற்றேன்

பைத்தியம் இவனென்று
படிப்போர் நினைத்தாலும்
பா எழுதும் என் ஆசையோ
பெறுகவே செய்கிறது

சிந்தையை நிறுத்தி
சிவனை நினைத்து
சரம்சரமாய் வரிகளில்
சஞ்சரிக்கலானேன்

அரசியல் சமூகம்
ஆன்மீகம் காதலென்று
அழகான வார்த்தைகளால்
அடுக்கிக் கொண்டு போனேன்

தட்டிக் கொடுப்போரும் கூடவே
தலையில் குட்டு வைப்போரும்
விமர்சனங்கள் செய்திடினும்
விமரிசையாய் எழுதலானேன்

எழுதிய கவிதைகளை
ஏட்டினில் பதிவிடவே
முயற்சியும் மேற்கொள்ள
முனைந்திட நானுள்ளேன்

ஊக்கம் பெறுவதினால்
உற்சாகமாய் படைப்பேன்
உள்ளத்து கற்பனையை
ஊற்றாக பெருக்கிடுவேன்

ஆசி கோரும் அன்பன்
சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...