Search This Blog

Saturday, June 16, 2018

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

இல்லறமெனும்
இயந்திரத்தை
இயக்குகின்ற
பொறியாளன்

இல்வாழ்க்கைத்
துணையோடு
இன்முகமாய்
நடத்திடுவான்

பழுதுபடும்
வேளையிலே
பயப்படாமல்
இருந்திடுவான்

குடும்பத்தை
கண்ணுக்கு
இமை போல
காத்திடுவான்

வீட்டிற்கு வெளியே
வீரனாயிருந்தாலும்
வெகுளித்தனத்தையே
விலாசமாய் கொண்டவன்

தாயையும் தாரத்தையும்
தராசு போன்று நிறுத்தி
சரிந்திடாமல் சரியாக
நிறுத்துகின்ற எஜமானன்

உத்யோகம் பார்த்து
பொருளீட்டும் வேளை
ஓயாமல் உழைத்து
பணம் தேடும் வேலை

காசு மிச்சப்படுத்துவதால்
கஞ்சனாக தெரிந்தாலும்
குடும்பத்தை நடத்துவதில்
கடவுளுக்கு நிகரானவன்

சொந்தம் பலரிருந்தாலும்
ஸ்நேகிதர் என்றிருந்தாலும்
சிரேஷ்டமான உறவென்பது
தந்தை என்பதேயாகும்

அப்பா என்றழைக்கும் போது
அந்நியோன்னியம் உண்டாகும்
அம்மா என்றழைக்கும் போது
அமைதியுண்டாகும்..

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...