தந்தையர் தினம்
இல்லறமெனும்
இயந்திரத்தை
இயக்குகின்ற
பொறியாளன்
இல்வாழ்க்கைத்
துணையோடு
இன்முகமாய்
நடத்திடுவான்
பழுதுபடும்
வேளையிலே
பயப்படாமல்
இருந்திடுவான்
குடும்பத்தை
கண்ணுக்கு
இமை போல
காத்திடுவான்
வீட்டிற்கு வெளியே
வீரனாயிருந்தாலும்
வெகுளித்தனத்தையே
விலாசமாய் கொண்டவன்
தாயையும் தாரத்தையும்
தராசு போன்று நிறுத்தி
சரிந்திடாமல் சரியாக
நிறுத்துகின்ற எஜமானன்
உத்யோகம் பார்த்து
பொருளீட்டும் வேளை
ஓயாமல் உழைத்து
பணம் தேடும் வேலை
காசு மிச்சப்படுத்துவதால்
கஞ்சனாக தெரிந்தாலும்
குடும்பத்தை நடத்துவதில்
கடவுளுக்கு நிகரானவன்
சொந்தம் பலரிருந்தாலும்
ஸ்நேகிதர் என்றிருந்தாலும்
சிரேஷ்டமான உறவென்பது
தந்தை என்பதேயாகும்
அப்பா என்றழைக்கும் போது
அந்நியோன்னியம் உண்டாகும்
அம்மா என்றழைக்கும் போது
அமைதியுண்டாகும்..
தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.06.18
No comments:
Post a Comment