Search This Blog

Monday, June 18, 2018

ஆனித் திருமஞ்சனம்

ஆனித் திருமஞ்சனம்

ஆனந்தமாய் இருக்குது
அற்புதமாய் இருக்குது
ஆனித் திருமஞ்சனத்தை
அனுபவித்து தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

அபிஷேகத்தை ஏற்றபடியே
அலங்காரத்தை பூண்டபடியே
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்மையப்பனை தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

அடியவர்கள் கோஷமிட
அந்தணர்கள் வேதமோத
ஆடி வரும் அவனழகினை
அகங்குளிர தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

ஆழித்தேரின் மீதமர்ந்து
அம்பலவன் சிவகாமியுடன்
அசைந்தாடி வரும் போது
அனுகிரகிக்க தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

அமுதினைக் கடையும் வேளை
ஆலகால விடத்தை உண்டவன்
அடி முடி காணவியலா ஜோதி
ஆனந்த தாண்டவத்தை தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது

சித்சபேசனை தரிசிக்கவே
சிதம்பரத்திற்கு வாருங்கள்
தாண்டவத்தை ரசித்திடவே
தில்லையம்பதிக்கு வாருங்கள்.

நடராஜா !! ஹர ஹர மகாதேவா !!
சித்சபேசா !! சிவ சிதம்பரம் !!

திருச்சிற்றம்பலம் !! திருச்சிற்றம்பலம் !!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 ** நாளைய தினம் சிதம்பரத்தில்
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த
நடராஜ மூர்த்தி ஆனித் திருமஞ்சன
தேர்த் திருவிழா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...