ஆனித் திருமஞ்சனம்
ஆனந்தமாய் இருக்குது
அற்புதமாய் இருக்குது
ஆனித் திருமஞ்சனத்தை
அனுபவித்து தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது
அபிஷேகத்தை ஏற்றபடியே
அலங்காரத்தை பூண்டபடியே
ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்மையப்பனை தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது
அடியவர்கள் கோஷமிட
அந்தணர்கள் வேதமோத
ஆடி வரும் அவனழகினை
அகங்குளிர தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது
ஆழித்தேரின் மீதமர்ந்து
அம்பலவன் சிவகாமியுடன்
அசைந்தாடி வரும் போது
அனுகிரகிக்க தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது
அமுதினைக் கடையும் வேளை
ஆலகால விடத்தை உண்டவன்
அடி முடி காணவியலா ஜோதி
ஆனந்த தாண்டவத்தை தரிசித்திட
ஆயுசும் நிறைஞ்சு போகுது
சித்சபேசனை தரிசிக்கவே
சிதம்பரத்திற்கு வாருங்கள்
தாண்டவத்தை ரசித்திடவே
தில்லையம்பதிக்கு வாருங்கள்.
நடராஜா !! ஹர ஹர மகாதேவா !!
சித்சபேசா !! சிவ சிதம்பரம் !!
திருச்சிற்றம்பலம் !! திருச்சிற்றம்பலம் !!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
** நாளைய தினம் சிதம்பரத்தில்
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த
நடராஜ மூர்த்தி ஆனித் திருமஞ்சன
தேர்த் திருவிழா.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.06.18
No comments:
Post a Comment